ஆப்நகரம்

ஐபிஎல் 2022 நடைபெறும் தேதி இதுதான்...பிசிசிஐ நிர்வாகிகள் மீட்டிங்: போட்டி நடைபெறும் இடமும் தேர்வு?

ஐபிஎல் 15ஆவது சீசன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Samayam Tamil 22 Jan 2022, 6:29 pm
ஐபிஎல் 15ஆவது சீசனை எங்கு நடத்துவது, பார்வையாளர்களை அனுமதிக்கலாமா போன்ற விஷயங்கள் குறித்து, இன்று மொத்தம் 10 அணிகளுடன் காணொலி காட்சி மூலம் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
Samayam Tamil ஐபிஎல் 2022


முதல் ஆலோசனை:

அப்போது ஐபிஎல் அணிகளுக்கான ஏல நடைமுறை, விதிகளை துவக்கத்திலேயே பிசிசிஐ விளக்கியது. மேலும் மெகா ஏலம் பிப்ரவரி 12 அல்லது 13-ல் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெளிவாக கூறிவிட்டதாம். தொடர்ந்து, கொரோனா சூழலைப் பொறுத்து இறுதித் தேதி மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தேதி:

இதனை தொடர்ந்து ஐபிஎல் 15ஆவது சீசனை எப்போது துவங்கலாம் என்ற விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது மார்ச் 27ஆம் தேதி முதல் மே இறுதிவரை போட்டிகளை நடத்தலாம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கருத்தில்கொண்டு போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அறிவித்திருக்கிறது. அப்போது, புனே நகரையும் சேர்க்க வேண்டும் என பல அணிகள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியவில்லை என்றால் தென்னாப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் நடத்த வேண்டாம் என்றும், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் அனைத்து அணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்துவது குறித்து பின் வரும் நாட்களில் முடிவு செய்துகொள்ளலாம் என பிசிசிஐ நிர்வாகிகளும், அணி உரிமையாளர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்