ஆப்நகரம்

சம்பவம் செய்த ஓபனிங் ஜோடி: சென்னை மாஸ் வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.

Samayam Tamil 4 Oct 2020, 11:41 pm
இன்றைய ஆட்டத்தில் துபாயில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் 63 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோல மாயங்க் அகர்வால் (26), மந்தீப் சிங் (27), நிக்கோலஸ் பூரன் (33) ஆகியோர் ஓரளவுக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகுர் இரண்டு விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.
Samayam Tamil csk


179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடக்க வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர். ஷேன் வாட்சன் 52 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகள் விளாசி 83 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி 53 பந்துகளில் 87 ரன்களும் சேர்த்து, ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கடைசி வரை களத்தில் இருந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

KXIP vs CSK IPL Match Score: சென்னை அபார வெற்றி... லைவ் ஸ்கோர்!

சென்னை அணி மீண்டும் பழைய பார்முக்குத் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்போட்டியில், சென்னை அணிக்காக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் சேர்த்த ஜோடியாக வாட்சன் - டூ பிளஸி இணை புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்