ஆப்நகரம்

ஒரு ரன்னுக்கு ரூ. 6 லட்சம் பெற்ற பென் ஸ்டோக் - வெத்து வேட்டான கதை

ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் போட்டியில் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் பென் ஸ்டோக். இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஏற்றார் போல் அவர் செயல்படவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 19 May 2018, 9:21 pm
ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் போட்டியில் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் பென் ஸ்டோக். இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஏற்றார் போல் அவர் செயல்படவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil Ben Stokes


12.5 கோடி:
இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ரூ. 12.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் தான் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளி நாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் இவர் தான்.

ஒரு ரன்னுக்கு 6 லட்சம் :
இவர் இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 போட்டிகளிலும் பேட்டிங் செய்த பென் ஸ்டோக் வெறும் 196 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட 12.5 கோடி ரூபாயை கணக்கு செய்து பார்த்தால் ஸ்டோக் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் அவருக்கு ரூ. 6.37 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலிங்கிலும் அவ்வளவாக ஜொலிக்காத பென் ஸ்டோக் 13 போட்டியில் விளையாடி, 12 போட்டியில் பவுலிங் செய்துள்ளார். அதில் 8 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தியுள்ளார்.

விக்கெட்டுக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ரூ. 12.5 கோடி பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்