ஆப்நகரம்

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் ரேஸ் விறுவிறுப்புக்கு சி.எஸ்.கே. தான் காரணமா?

இப்படிப்பட்ட அறிய நிகழ்வு நடப்பது, ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

Samayam Tamil 2 Nov 2020, 1:24 pm
ஐபிஎல் 13ஆவது சீசனில் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட அறிய நிகழ்வு நடப்பது, ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil CSK-2020


12 புள்ளிகள் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணியும் கடைசி லீக் போட்டியில் தோல்வியைச் சந்தித்து 12 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னையைவிடப் பின்தங்கியது.

ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாகக் கடைசி இடத்திலிருக்கும் அணி 12 புள்ளிகள் பெற்றிருப்பதால்தான், பிளே ஆஃப் ரேஸ் இவ்வளவு கடினமாக மாறியுள்ளது எனக் கருதப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது இடத்தை உறுதி செய்யும். மூன்றாவது, நான்காவது இடத்தை ரன் ரேட் விகிதம் தீர்மானிக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்!

இரண்டாவது, மூன்றாவது இடத்தில் நீடிக்கும் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள், இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைவிடக் குறைவான நெட் ரன்ரேட் விகிதத்தில் தோல்வியடைந்தால், பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும். இதனால், இன்று இரு அணிகளும் அதிரடியாக விளையாடும் என்பதால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்