ஆப்நகரம்

ஐபிஎல் 2018: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்!

டாஸ் வென்ற சென்னை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

Samayam Tamil 7 Apr 2018, 8:01 pm
மும்பை: டாஸ் வென்ற சென்னை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.
Samayam Tamil CSK vs MI
ஐபிஎல் 2018


11வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து கடந்த ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் கோப்பையை ஒப்படைத்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். எனவே மும்பை அணி முதலில் பேட் செய்கிறது.

இதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் விளையாடியதில், மும்பை - 12, சென்னை - 10 முறை வெற்றி பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், இம்ரான் தாகீர், மார்க் உட்.

மும்பை இண்டியன்ஸ்: எவின் லெவிஸ், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கெரான் பொலார்டு, சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா, மாயங்க் மார்கண்டே, மிட்செல் மெஹ்லாகன், முஷ்டபிகுர் ரஹ்மான், ஜஸ்ப்ரிட் பும்ரா.
CSK won the toss and elect to field against MI in IPL 2018.

அடுத்த செய்தி

டிரெண்டிங்