ஆப்நகரம்

டெல்லி அணி கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் ஃபைன்... எதுக்கு தெரியுமா?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Sep 2020, 3:46 pm
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
Samayam Tamil iyer


ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் காரணமாக, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 13 ஆவது சீசனில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

DC vs SRH: ஹைதராபாத் அணிக்குக் கடைசி நேரத்தில் கை கொடுத்த பௌலர்கள்!

இதனிடையே, ஐபிஎல் 13 ஆவது சீசனில் முதல் தோல்வியைச் சந்தித்தது தொடர்பாகப் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ஹைதராபாத் அணி எங்களுக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. அதை எளிதில் அடைந்து விடுவோம் என்றுதான் நான் நினைத்தேன்.

ஆனால், ஹைதராபாத் அணி பௌலர்கள் சிறப்பாகப் பந்து வீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தோம். பேட்டிங், பௌலிங், பீல்டிங் அனைத்திலும் எங்களை அவர்கள் விஞ்சிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்