இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது.
அதிக ஆர்வம்
ஐபிஎல் தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். ஒருபுறம் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தொடர்
மறுபுறம் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் குறைந்த அளவிலான போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில்,“ தற்போதைக்கு எவ்வித செய்தியும் இல்லை. முதலில் ஒத்திவைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் தற்போது சூழல் மேலும் மேசமடைந்துள்ளது. இது உடனடியாக சரியாக வாய்ப்பில்லை. உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய தொடர். அதனால் குறைந்த அளவினான போட்டிகள் கொண்ட தொடராக இந்தாண்டு நடந்தால் சிறப்பாக இருக்கும்.
கொரோனாவை விரட்டியடிக்க வித்தியாசமாக ட்விட்டர் மூலம் பிசிசிஐ அட்வைஸ்!
அஸ்வினுடன்
மேலும் பட்லர் தன்னை யாருடன் தற்போது தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்ற கேள்விக்கு அளித்த பதிலில், “ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புக்றேன். மான்கட் ரன் அவுட் செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போதும் அந்த போட்டோவை வீட்டின் உள்ளேயே இருங்கள், வெளியே செல்ல வேண்டாம் என அதிகளவில் ட்விட்டரில் பகிர்ந்தேன்” என்றார்.
மோடியின் மூன்று வார முடக்கம் முடிவை முன் கூட்டியே கணித்தாரா ஆர்ச்சர்!
அதிக ஆர்வம்
ஐபிஎல் தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். ஒருபுறம் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தொடர்
மறுபுறம் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் குறைந்த அளவிலான போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில்,“ தற்போதைக்கு எவ்வித செய்தியும் இல்லை. முதலில் ஒத்திவைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் தற்போது சூழல் மேலும் மேசமடைந்துள்ளது. இது உடனடியாக சரியாக வாய்ப்பில்லை. உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய தொடர். அதனால் குறைந்த அளவினான போட்டிகள் கொண்ட தொடராக இந்தாண்டு நடந்தால் சிறப்பாக இருக்கும்.
கொரோனாவை விரட்டியடிக்க வித்தியாசமாக ட்விட்டர் மூலம் பிசிசிஐ அட்வைஸ்!
அஸ்வினுடன்
மேலும் பட்லர் தன்னை யாருடன் தற்போது தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்ற கேள்விக்கு அளித்த பதிலில், “ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புக்றேன். மான்கட் ரன் அவுட் செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போதும் அந்த போட்டோவை வீட்டின் உள்ளேயே இருங்கள், வெளியே செல்ல வேண்டாம் என அதிகளவில் ட்விட்டரில் பகிர்ந்தேன்” என்றார்.
மோடியின் மூன்று வார முடக்கம் முடிவை முன் கூட்டியே கணித்தாரா ஆர்ச்சர்!