போட்டியின் நடுவே கோலி காலில் விழுந்து புரண்டு செல்பி எடுத்த ரசிகர்!!
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலியின் காலில் விழுந்து, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil 13 May 2018, 6:12 pm
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலியின் காலில் விழுந்து, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
11 வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில், பெங்களூர் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் 72* ரன்களும், விராத் கோலி 70 ரன்களும் குவித்தனர்.
இந்நிலையில், போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி வந்து, கோலி மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஓடிவந்து அவரின் காலில் விழுந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாதுகாவலர்கள், அந்த ரசிகர்கரை அழை த்துச் சென்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின், தோனி ஆகியோருக்கு இருக்கும் தீவிர ரசிகர்கள், போட்டியின் போது உள்ளே வந்து அவர்களின் காலில் விழுவது வழக்கமாக நடைபெறும். இப்போது, விராத் கோலியும் அதேபோல் வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில், பெங்களூர் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் 72* ரன்களும், விராத் கோலி 70 ரன்களும் குவித்தனர்.
இந்நிலையில், போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி வந்து, கோலி மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஓடிவந்து அவரின் காலில் விழுந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாதுகாவலர்கள், அந்த ரசிகர்கரை அழை த்துச் சென்றனர்.