ஆப்நகரம்

ஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே!

புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமல் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 May 2020, 1:18 pm
இந்தியாவில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், வரும் அக்டோபர் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil Anil Kumble


கும்ளே ஆதரவு
இந்நிலையில், ரசிகர்கள் இல்லாமல் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய கும்ளே கூறுகையில், “ஆமாம் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் நம்பிக்கை உள்ளது. இன்னும் அதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான அட்டவணையை நாம் மாற்ற வேண்டு்ம். ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால் 3 அல்லது 4 இடங்களை மட்டும் தேர்வு செய்து அங்கு போட்டிகளை நடத்த வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.

லட்சுமண் கருத்து
இதற்கிடையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து லட்சுமண் கூறுகையில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்க இந்தாண்டு அதிக வாய்ப்பு உள்ளது. இதில் பங்குதாரர்களின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. 3, 4 மைதானங்களை மட்டும் தேர்வு செய்து போட்டிகளை நடத்த வேண்டும். ஏன் என்றால் பயணம் செய்வது மிகப்பெரிய சவாலான விஷயம்” என்றார்.

டிசம்பர் 3 இல் துவங்குகிறதா இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்