ஆப்நகரம்

CSK vs GT Final: 'இன்றும் ஆட்டம் ரத்தானால்'...கோப்பை யாருக்கு? இந்த அணிக்குத்தான்..பிசிசிஐ அதிரடி முடிவு!

IPL 2023 final match today : இன்று ஆட்டம் ரத்தானால் கோப்பை இந்த அணிக்குதான் என தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 29 May 2023, 11:07 am
ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் மைனாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் இந்த இறுதிப் போட்டியை காண மைதானத்தில் திரண்டனர்.
Samayam Tamil தோனி, ஹார்திக் பாண்டியா


இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், போட்டி துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாக, மைதானத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால், சுமார் 2 மணி நேரம் ஆட்டம் தடைபட்ட நிலையில், அடுத்து 9 மணியளவில் மழையில் ஆட்டம் நின்றது. அடுத்து, 9:35 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்தது. இதனால், மைதானத்தில் மீண்டும் தார்பாய்கள் போர்த்தப்பட்டது.

இன்று நடைபெறும்:

மழை இப்போது நின்றுவிடும், அப்போது நின்றுவிடும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரவு 10:55 மணியளவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்தி ஒன்று வெளியானது. மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், ஆட்டத்தை திட்டமிட்டபடி 12:06 மணிக்குள் துவங்க முடியாது என மைதான ஊழியளர்கள் தெரிவித்துவிட்டதால், வேறு வழியில்லாமல் பைனலை திங்கட் கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளனர்.

ரசிகர்களுக்கு சிக்கல்:

இதனால், அகமதாபாத் சென்றுள்ள ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பெரும் அளவில் ரசிகர்கள் சென்றிருக்கிறார்கள். போட்டி ஞாயிறு முடிந்துவிடும். திங்கட் கிழமை காலையில் ஊர்திரும்பிவிடலாம் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், திங்கட் கிழமைக்கு போட்டி மாற்றப்பட்டிருப்பதால், இன்று முழுவதும் அவர்கள் அகமதாபாத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்தின் இன்றைய வானிலை:

இதுஒருபக்கம் இருக்க, இன்று இரவும் அகமதாபாத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால் பிசிசிஐ, ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கோப்பை யாருக்கு?

ஒருவேளை இன்றும் மழை காரணமாக ஆட்டம் ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்குத்தான் கோப்பை வழங்கப்படும். கோப்பை பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்