சென்னை: ஐபிஎல் தொடருக்கு இடையே, சென்னையை ஹர்பஜன் சிங் நன்கு சுற்றிப் பார்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 11வது சீசன், வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. சிறிது இடைவெளிக்கு பிறகு, மஞ்சள் நிற ஜெர்ஸி உடன் தோனி தலைமையில் சி.எஸ்.கே மீண்டும் களமிறங்குகிறது.
இதற்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஹர்பஜன் சிங் சி.எஸ்.கேவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் சி.எஸ்.கேவிற்கு தேர்வானது முதல், தமிழில் டுவிட்களை அள்ளி வீசி வருகிறார். இந்நிலையில் நேற்று ஓபன் பஸ்ஸில் சி.எஸ்.கே வீரர்கள் சென்னையை வலம் வந்தனர்.
இதற்கு பிறகு, ‘மெட்ராஸச் சுத்தி பார்த்த பாஜி’ என்று டுவிட் செய்து ஹர்பஜன் சிங் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
’நாங்கள் சுற்றி வந்தது மகிழ்ச்சியானது; சி.எஸ்.கே மீண்டும் வருவது சிறப்பான ஒன்று; நாங்கள் திரும்ப வந்து விட்டோம் ‘ என்று ஹர்பஜன் வீடியோவில் பேசியுள்ளார்.
Harbhajan Singh travels over Chennai inbetween IPL Session.
ஐபிஎல் தொடரின் 11வது சீசன், வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. சிறிது இடைவெளிக்கு பிறகு, மஞ்சள் நிற ஜெர்ஸி உடன் தோனி தலைமையில் சி.எஸ்.கே மீண்டும் களமிறங்குகிறது.
இதற்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஹர்பஜன் சிங் சி.எஸ்.கேவில் சேர்க்கப்பட்டுள்ளார்.