ஆப்நகரம்

'ஒரு ரன் அடிக்காதது ஏன் ஷர்தூல்?'...தோனி உன்னைய நம்புனது தப்பா? 4 வருசத்து கதையை தூக்கிட்டு வரும் ரசிகர்கள்!

4 வருசத்துக்கு முன்னாடி, தோனியின் நம்பிக்கையை சிதறடித்த ஷர்தூல் தாகூர். ரசிகர்கள் இப்போது கொதிப்பு.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 7 Apr 2023, 10:19 am
Samayam Tamil ஷர்தூல் தாகூர், தோனி
ஐபிஎல் 16ஆவது சீசனின், நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதில், முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பியதால், அந்த அணி 89/5 என படுமோசமாக திணறியது. அப்போது களமிறங்கிய ஷர்தூல் தாகூர், யார் எதிர்பாராத வகையில் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவித்தார்.

ஷர்தூல் தாகூர் மிரட்டல் அடி:

இதனால், ஷர்தூல் தாகூர் 20 பந்துகளிலேயே அரை சதம் அடித்து, 16ஆவது சீசனில் அதிவிரைவாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஷர்தூல் தாகூர் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார்.

இப்போட்டியில் ஷர்தூல் தாகூர் சரியான டைமிங்கில் பந்துகளை எதிர்கொண்டு அசத்தினார். ஒவ்வொரு பந்தும் கிளீன் ஹிட்டாகத்தான் இருந்தது. இவரது அதிரடி காரணமாகத்தான் கொல்கத்தா அணி 207 ரன்களை குவித்து அபார வெற்றியைப் பெற்றது. இதனால், ஆட்ட நாயகன் விருதினை வென்றார். மேலும், ஷர்தூல் தாகூருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் மட்டும் ஷர்தூல் தாகூரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏன்?

இதற்கு முக்கிய காரணம் 2019ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் உடனான பைனல்தான். அப்போட்டியில் மும்பையை வீழ்த்த சிஎஸ்கேவுக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் வாட்சன் ஆட்டமிழந்தப் பிறகு, ஆட்டத்தை முடிக்க ஹர்பஜன்சிங், தீபக் சஹார் ஆகியோருக்கு முன், ஷர்தூல் தாகூரைத்தான் தோனி நம்பி களமிறக்கினார். ஒரு ரன் அடித்திருந்தாலும், சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்திருக்கும்.

ஆனால், மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்தூல் தாகூர் ஆட்டமிழந்தார். அந்த ஒரு பந்தில்தான் சிஎஸ்கேவின் கோப்பை கனவு தகர்ந்தது. இதனால்தான், சிஎஸ்கே ரசிகர்கள் ஷர்தூல் தாகூரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு, கொல்கத்தா அணி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்