ஆப்நகரம்

அம்பத்தி ராயுடுவுக்கு அநீதி: பொங்கி எழுந்த ஹர்பஜன்!

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்ட அம்பத்தி ராயுடுவின் திறமை கவனிக்கக்கூடியது என்று ஹர்பஜன் சிங் கருத்து.

Samayam Tamil 21 Sep 2020, 2:42 pm
ஐபிஎல் 13ஆவது சீசன் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக அம்பத்தி ராயிடு 71 ரன்கள் விளாசித் தள்ளியதால், சென்னை அணி அபார வெற்றிபெற்றது.
Samayam Tamil harbhajan singh on ambati rayudu


முதல் போட்டியிலேயே சிறப்பாக சோபித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ராயுடு குறித்துப் பாராட்டிப் பேசிய ஹர்பஜன் சிங், ராயுடு கடந்த ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற தகுதியானவராக இருந்தார். ஆனால், அவருக்கு பதில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார் என கூறினார்.

தனியார் இணையதள பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த ஹர்பஜன் சிங், “ராயுடு, டுபிளஸிஸ் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிரகாசமான தொடக்கத்தைச் சென்னை முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து இதேபோல் பயணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் கோப்பை வாங்கும் போது, முதல் லீக் போட்டியில் மும்பையை வீழ்த்தினோம். தற்போதும், நாம் மும்பையைச் சாய்த்துள்ளோம். இது நமக்கு நல்ல சகுனம். மீண்டும் நாம் நன்றாக முடிப்போம் என்று நம்புகிறேன்” என கூறினார்.

கடந்த உலகக் கோப்பை தொடரில் ராயுடு இடம்பெறாதது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அநீதி’ நடந்துவிட்டது என கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

'ஸ்டோனிஸ் புயல்' எங்களை நாசம் செய்துவிட்டது: மயங்க் அகர்வால் கதறல்!

“ராயுடு திறமையான பேட்ஸ்மேன். உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். அவர் நிச்சயம் அந்த அணியில் இருந்திருக்க வேண்டும். தற்போது முதல் லீக் போட்டியில் சிறப்பாக ஆட்டம் மூலம் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். திறமைகள் கவனிக்கப்படக் கூடிய ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்