ஆப்நகரம்

எட்டமுடியாத இலக்கை துரத்த முயன்ற பஞ்சாப் - கொல்கத்தா அபார வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Samayam Tamil 12 May 2018, 9:19 pm
Samayam Tamil rahul
இந்தூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் மிக சிறப்பாக ரன்களை குவித்தனர்.

கொல்கத்தா அபாரம்:
கொல்கத்தாவின் கிறிஸ் லின் 27(17), நரேன் 75 (36), உத்தப்பா 24, ரசல் 31 (14), தினேஷ் கார்த்திக் 50 (23), ராணா 11, கில் 16, சியர்லஸ் 6 என ரண்களை விளாச 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

துரத்திய பஞ்சாப் :
246 என்ற இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ராகுல் மின்னல் வேகத்தில் விளையாடினார். 29 பந்தில் 7 சிக்ஸர் 2 பவுண்டரி என விளாசி 66 ரன்கள் குவித்தார்.
கெய்ல் 21, அகர்வால் 0, கருண் நாயர் 3 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின் வரிசையில் பின்ச் 34, அக்ஸர் படேல் 19, அடிக்க கேப்டன் அஸ்வின் 22 பந்தில் 45 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இந்நிலையில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்