ஆப்நகரம்

ஐபிஎல் திருவிழா; பிரபுதேவா, தமன்னா கலக்கல் நடனத்துடன் கோலாகலத் தொடக்கம்!

ஐபிஎல் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது.

Samayam Tamil 7 Apr 2018, 8:36 pm
மும்பை: ஐபிஎல் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது.
Samayam Tamil IPL Ceremony


11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் வண்ணமயமான தொடக்க விழா நடைபெற்றது.

இதில் பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடன புயல் பிரபுதேவா, நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வசி, ஊர்வசி பாடலுக்கு பிரபுதேவா ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் குலேபகாவலி திரைப்பட பாடலுக்கு உற்சாக நடனமாடினார்.

பின்னர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற ரதத்தில் தமன்னா அரங்கிற்கு வருகை புரிந்தார். அனைத்து நட்சத்திரங்களும் பல்வேறு மொழிப் பாடலுக்கு நடனமாடினர்.

மேலும் பிரபல பாடகர் மிகா சிங் ஆர்வத்துடன் பாடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

IPL 2018 starts today with colourful opening ceremony.

அடுத்த செய்தி

டிரெண்டிங்