ஆப்நகரம்

Chepauk Stadium: ஐபிஎல்.,லில் என்ன சிறப்பாக ஆடினாலும் இறுதிப்போட்டியில் சென்னைக்கு வாய்ப்பில்லை... ஏன் தெரியுமா?

ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 9 Apr 2019, 10:17 am
ஐபிஎல் தொடர் மிக கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றது. இதில் சென்னை அணியின் ஆதிக்கம் மீண்டும் தொடர்கிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க வாய்ப்பில்லை என கூறப்படுள்ளது.
Samayam Tamil csk


ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, இந்த முறையும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றது. 5 போட்டிகளில் போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

சென்னையில் இறுதிப்போட்டி நடக்க வாய்ப்பில்லை:
சென்னை அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவதால் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. அப்படி இறுதிப் போட்டிக்கு சென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Whistle Podu Army: மோடி சொன்னதை செய்த சென்னை விசில் போடும் ஆர்மியை பாராட்டிய ரெய்னா!

கடந்த முறை காவேரி பிரச்னையால் சென்னையில் போட்டிகள் நடக்காமல் போனது. ஆனால் இந்த முறை மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய கேலரி பிரச்னை எழுந்துள்ளது.


மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடந்த 2012 முதல் தடை விதித்து இருப்பதால் சுமார் 12, 000 வரை அமரக் கூடிய டிக்கெட்டுகள் வீணாக வாய்ப்புள்ளதால், இறுதிப்போட்டி சென்னையில் நடத்துவதற்கு பதிலாக மும்பையில் நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருவதால், மும்பையில் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஐதராபாத் மைதானத்தில் நடத்த அனைத்து வகை முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்