ஆப்நகரம்

ஐபிஎல்., : வருண் சக்கரவர்த்தி ‘அவுட்’!

காயம் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஐபிஎல்., தொடரில் இருந்து விலகினார்.

Samayam Tamil 1 May 2019, 7:08 pm
மொஹாலி: காயம் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஐபிஎல்., தொடரில் இருந்து விலகினார்.
Samayam Tamil Varun Chakravarthy


இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.

டெல்லி ‘நம்பர்-1’:
இத்தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை, டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. பெங்களூரு அணி அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறியது.
வருண் காயம்:
இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி, விரலில் காயமடைந்தார். இதனால் பெரும்பாலான போட்டியில் அவர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், எஞ்சியுள்ள ஐபிஎல்., தொடரில் இருந்து பங்கேற்மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்