ஆப்நகரம்

IPL 2022: 'சிஎஸ்கே அணிக்கு'...அந்த சீனியர் வீரர் நிச்சயம் திரும்புவார்: சோப்ரா நம்பிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த சீனியர் வீரர் திரும்புவார் என ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jan 2022, 3:46 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 13ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பி, முதல்முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தொடர்ந்து 14ஆவது சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, கோப்பையை தட்டித்தூக்கி, அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. இதற்கு மிகமுக்கிய காரணம் சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸிதான்.
Samayam Tamil சென்னை சூப்பர் கிங்ஸ்


இருவரும் தலா 635, 633 ரன்கள் அடித்து, தொடரின் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, 15ஆவது சீசனுக்கு முன்னால் ஒரு அணி, விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்தது. டூ பிளஸி, சாம் கரன் போன்றவர்களை கழற்றிவிட்டது.

சோப்ரா பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, மெகா ஏலத்தின்போது டூ பிளஸி சிஎஸ்கேவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார். ''மெகா ஏலத்தின்போது டூ பிளஸியை சிஎஸ்கேதான் வாங்கும் என நினைக்கிறேன். சிஎஸ்கே எப்போதுமே வீரர்களின் வயதை ஒரு பிரச்சினையாக பார்க்காது. ருதுராஜுடம் இவரால் சிறந்த துவக்கத்தை தர முடியும். அதற்காகவே, அவரை சிஎஸ்கே வாங்கும்'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், மெகா ஏலத்தின்போது குவின்டன் டி காக், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்