ஆப்நகரம்

‘தோனி சார்’…ப்ளீஸ் எனக்காக ஒரு போட்டியில் கேப்டனாக இருங்க: கெஞ்சிய வீரர்: தோனியின் பதில் இதுதான்!

தோனி எனக்காக ஒரு போட்டியில் கேப்டனாக இருக்க வேண்டும் என வீரர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 30 Mar 2022, 5:38 pm
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே எம்.எஸ். தோனியுடன் தனக்கு இருந்த கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார். இதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே சென்னை அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

கான்வே பேட்டி:

அவர் அந்த வீடியோவில் கூறியதாவது, "நான் தலைசிறந்த கேப்டனான எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட ஆசைப்பட்டேன். நான் அவரிடம் இதைப்பற்றி சிறிது உரையாடினேன். அப்போது அவரிடம் ‘நீங்கள் நிச்சயம் இன்னொரு சீசன் கேப்டனாக தொடர முடியாதா? நான், உங்களின் கேப்டன்ஸியில் விளையாட விரும்புகிறேன்’ என கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். மேலும், அவர் ‘நான் உங்களுடன் தான் நிச்சயம் இருக்க போகிறேன்’ என கூறினார்’’ என்று கான்வே தெரிவித்தார்.

மேலும் பேசிய கான்வே, ‘‘இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் மதிய உணவை தோனிக்கும் ஜடேஜாவிற்கும் இடையில் தான் அமர்ந்து சாப்பிட்டேன். அவர்களுடன் பழகி அவர்களை புரிந்துகொள்வது எனக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் தான். எளிதாக அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் எளிதாக சென்று பேச முடியும். இரண்டு இந்திய கிரிக்கெட் ஆளுமைகளுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது" எனக் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்