ஆப்நகரம்

IPL 2022: லக்னோ அணியின் பெயர் இதுதான்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சிஎஸ்கேவுக்கு டஃப்!

லக்னோ அணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jan 2022, 7:37 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் கொரோனாவுக்கு மத்தியிலும், அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15ஆவது சீசனுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டும் பங்கேற்று வந்த இத்தொடரில், புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகளும் தற்போது இணைந்துள்ளன.
Samayam Tamil லக்னோ அணி


இதனால், இந்த இரு அணிகளுக்கும் தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, 8 அணிகளும் பிசிசிஐ விதிமுறைக்கு உட்பட்டு தலா 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. அணிகளும் தக்கவைத்துவிட்டன. புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

பெயர் இதுதான்:

இந்நிலையில், புதிய அணியான லக்னோ அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மூன்று வார்த்தைகள், சூப்பர் என்ற வார்த்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒத்துப்போவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்