ஆப்நகரம்

129 பந்துகளில் 312 ரன்கள்…தெறிக்கவிட்ட இந்திய இளம் வீரர்: ஐபிஎல் அணிகள் மாறிமாறி அழைப்பு விடுப்பு!

ஐபிஎல் ஏலத்தில் இந்திய இளம் வீரர் கோடிகளை குவிக்க அதிக வாய்ப்புள்ளது.

Samayam Tamil 13 Jan 2022, 6:26 am
ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அணிகளும் ஏலத்தில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்திய இளம் வீரர்களை அழைத்து திறமைகளைப் பரிசோதித்து வருகின்றன.
Samayam Tamil லவ்னித் ஷிசோடியா


இளம் வீரர் அதிரடி:

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லவ்னித் ஷிசோடியாவை பல அணிகள் அழைத்து, அவரது திறமையை பரிசோதிக்க பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்ற வைத்து வருகின்றன. இவருக்கு இப்படி மவுசி அதிகரிக்க முக்கிய காரணம், சமீபத்தில் பிசிசிஐ நடத்திய 25 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர்தான்.

இத்தொடரில் ஷிசோடியா 231 ஸ்ட்ரெக் ரேட்டுடன் தொடர்ந்து ரன்களை குவித்துள்ளார். மேலும், ஒரு உள்ளூர் ஒருநாள் தொடரில் 129 பந்துகளில் 312 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். இப்படி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவரை வாங்க பல அணிகள் இப்போதே தயாராகிவிட்டன.

பஞ்சாப் ஸ்கெட்ச்:

பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியாளராக இருந்தவர்தான், ஷிசோடியாவுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். இதனால் அந்த அணி, இவரை பஞ்சாப் அணிக்குள் கொண்டுவர தீவிரமாக முயன்று வருகின்றது. இவரை அழைத்து பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்க வைத்தது. அதில் 26 பந்துகளில் 66 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால், அவரை நிச்சயம் வாங்கியே ஆக வேண்டும் என அந்த அணி முடிவில் இருக்கிறதாம்.

மேலும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளும் இவரை அழைத்து, பயிற்சி போட்டியில் பங்கேற்க வைத்துள்ளது. இதனால், ஐபிஎல் மெகா ஏலத்தில் ஷிசோடியாவுக்கு கோடிகள் குவியும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்