ஆப்நகரம்

IPL 2022: ‘ஆள விடுங்கப்பா சாமி’…எங்களுக்கு எந்த வீரரும் தேவையில்லை: அதிரடி முடிவெடுத்த அணி?

நாங்கள் எந்த வீரரையும் தக்கவைக்க விரும்பவில்லை என ஐபிஎல் அணி தெரிவித்துள்ளதாம்.

Samayam Tamil 27 Nov 2021, 7:04 pm
2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒருமுறைகூட கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது. பிளே ஆஃப் செல்வதுகூட எப்போதாவது ஒருமுறை மட்டுமே. கடந்த சீசனில்கூட அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் போன்ற வீரர்கள் இருந்தும் பிளே ஆஃப் கூட செல்ல முடியவில்லை.
Samayam Tamil ஐபிஎல்


ராகுல் அவுட்:

இதனால், இந்த அணியை ராசியில்லாத அணியாக பலர் பார்க்கிறார்கள். கே.எல்.ராகுல்கூட இதே காரணத்தைக் கூறிதான், அணியிலிருந்து விலகி புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் இரண்டில் ஒன்றில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளதாம். அதாவது, மெகா ஏலத்திற்கு முன்பு, ஒரு வீரரை கூட தக்கவைக்காமல் முழு தொகையான 90 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகை கையிருப்பில் இருந்தால், அந்த அணி குறைந்தது 5 உலகத் தரமான வீரர்களை அணிக்குள் கொண்டுவர முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பிசிசிஐ விதிமுறை:

பிசிசிஐ விதிமுறைப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்கும் முதல் நபருக்கு 16 கோடியும், இரண்டாவது நபருக்கு 12 கோடியும் கொடுக்க வேண்டும். மூன்றாவது, நான்காவது வீரர்களுக்கு தலா 8, 6 கோடிகளை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்