ஆப்நகரம்

RCB vs RR: ‘வாய்ப்பை பயன்படுத்தாத ஆர்சிபி’…படுசொதப்பல்: ராஜஸ்தான் அபார பந்துவீச்சு…விக்கெட் வேட்டை!

வாய்ப்பை பயன்படுத்தாமல் ஆர்சிபி அணி கோப்பை விட்டது.

Samayam Tamil 27 May 2022, 9:15 pm
ஐபிஎல் 15ஆவது சீசனின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்


ஆர்சிபி இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் டூ பிளஸி, விராட் கோலி இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். அப்போது 1.5ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் கோலி 7 (8) விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சாம்சன் தவறு:

இதனைத் தொடர்ந்து போல்ட், பிரசித் இருவரும் முதல் 4 ஓவர்களை வீசி வெறும் 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார். அடுத்து ஒபிட் மிக்கே, அஸ்வின் ஆகியோருக்கு ஓவர்களை கொடுத்து, பவர் பிளேவை சாம்சன் முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் போல்ட், பிரசித் கிருஷ்ணா இருவருக்குமே சாம்சன் ஓவர்களை கொடுத்தார்.

தலா 3 ஓவர்கள்:

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பௌலர்கள் ஒரு ஓவரை வீசினால், முழுவீச்சில் முழு ஆற்றலை பயன்படுத்தி பந்துவீசு வார்கள். இதனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இரண்டு ஓவர்கள்வரை மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், சாம்சன் வழக்கத்திற்கு மாறாக பவர் பிளேவில் பௌல்ட், பிரசித் கிருஷ்ணாவுக்கு தலா 3 ஓவர்களை முடித்துவிட்டார். எதாவது ஒரு பௌலர்களுக்கு மட்டும் இப்படி 3 ஓவர்களை மட்டும் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

ரன் குவிப்பு:

முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் சென்ற நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 21 ரன்கள்வரை சென்றது. இப்படியொரு சொதப்பல் திட்டத்தை எந்த கேப்டனும் செயல்படுத்த மாட்டார் என ரசிகர்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆர்சிபி சொதப்பல்:

இதனைத் தொடர்ந்து பவர் பிளே முடிந்தப் பிறகு, ஆர்சிபி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அந்த அளவுக்கு அஸ்வின், சஹல், ஒபிட் மிக்கே ஆகியோர் சிறப்பாக பந்துவீச ஆரம்பித்தார்கள். இந்த அழுத்தங்கள் காரணமாக டூ பிளஸி 25 (27), மேக்ஸ்வெல் 24 (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாட வந்த படிதரும் 58 (42) ஆட்டமிழந்தார்.

இதனால், ஆர்சிபியின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. 180 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 160 ரன்களை தொடுவதே பெரிய விஷமாக மாறியது. இந்நிலையில் லாம்ரோரும் 8 (10) படுமோசமாக சொதப்பினார்.

தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 6 (7), ஹசரங்கா 0 (1), ஹர்ஷல் படேல் 1 (2) ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 157/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்