ஆப்நகரம்

RCB vs LSG: 'எப்பா..என்னா சாதனை'...வரலாறு படைத்தார் விராட் கோலி: டூ பிளஸி 115 மீட்டர் சிக்ஸர்..ரன் குவிப்பு!

லக்னோ அணிக்கு எதிராக டூ பிளஸி 115 மீட்டர் சிக்ஸரை அடித்தார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 10 Apr 2023, 9:18 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் 15ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன.
Samayam Tamil விராட் கோலி


இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆர்சிபி இன்னிங்ஸ்:


இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில், ஓபனர்கள் விராட் கோலி மற்றும் பாப் டூ பிளஸி இருவரும் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். அப்போது விராட் கோலி அரை சதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார்.

இவர் சரியான பார்மில் இருந்ததால் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 44 பந்துகளில் தலா 4 பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து டூ பிளஸியுடன், மேக்ஸ்வெல் இணைந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார்.

இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களை அடிப்பதில்தான் கவனம் செலுத்தினர். உனாத்கட், மார்க் உட், ரவி பிஷ்னோய், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான் என அனைத்து பௌலர்களையும் அதிரடியாக எதிர்கொண்டு அசத்தினார்கள். இறுதியில் இவரும் அரை சதம் கடந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தனர்.

இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212/2 ரன்களை குவித்து அசத்தியது. டூ பிளஸி 46 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்களையும், மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்து கடைசி ஓவர்வரை களத்தில் இருந்தனர்.

விராட் கோலி சாதனை:

இப்போட்டியில் லக்னோவுக்கு எதிராக கோலி 61 ரன்களை அடித்ததன் மூலம், அனைத்து அணிகளுக்கும் எதிராக 60+ ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக 90*, டெல்லிக்கு எதிராக 99, குஜராத் டைடன்ஸுக்கு எதிராக 73, கொல்கத்தாவுக்கு எதிராக 100, மும்பைக்கு எதிராக 92*, பஞ்சாப்புக்கு எதிராக 113, ராஜஸ்தானுக்கு எதிராக 72*, சன் ரைசர்ஸுக்கு எதிராக 93*, லக்னோவுக்கு எதிராக 61 ரன்களை அடித்துள்ளார்.

டூ பிளஸி 115 மீட்டர்:

இப்போட்டியில் டூ பிளஸி, ரவி பிஷ்னோய்க்கு எதிராக 115 மீட்டர் சிக்ஸரை விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்