ஆப்நகரம்

PBKS vs GT: 'அசிங்கமா இருக்கு பா'...இத்தனை டாட் பாலா ஆடுறது: பஞ்சாப் பேட்டர்கள் குவித்து தவன் அதிருப்தி!

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி படுமோசமாக சொதப்பி தோற்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 14 Apr 2023, 7:31 am
ஐபிஎல் 16ஆவது சீசன் 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil ஷிகர் தவன்


பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்:


முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடாமல் சொதப்பினார்கள். குறிப்பாக, அதிக டாட் பால்களையும் எதிர்கொண்டனர். மேத்யூ ஷார்ட் 36 (24), ராஜபக்சா 20 (26), ஜிதேஷ் ஷர்மா 25 (23), சாம் கரன் 22 (22) என அதிரடி பேட்டர்கள் நிதானமாக விளையாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் ஷாருக்கான் அதிரடியாக செயல்பட்டு 9 பந்துகளில் 22 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 153/8 ரன்களை சேர்த்தது. மொத்தம் 56 டாட் பால்களை பஞ்சாப் பேட்டர்கள் எதிர்கொண்டு சொதப்பினார்கள்.

குஜராத் இன்னிங்ஸ்
:

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர்கள் விருத்திமான் சாஹா 30 (19), ஷுப்மன் கில் 67 (49) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். அடுத்து சாய் சுதர்ஷன் 19 (20), ஹார்திக் பாண்டியா 8 (11) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இறுதியில் டேவிட் மில்லர் 17 (18), ராகுல் தேவத்தியா 5 (2) ஆகியோர் களத்தில் இருக்கும்போது, குஜராத் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 154/4 ரன்களை சேர்த்து வெற்றியைப் பெற்றது.

தவன் பேட்டி:

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய ஷிகர் தவன், ''பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதனை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். 56 டாட் பால்களை ஆடினால், ஒரு அணி எப்படித்தான் ஜெயிக்கும்? டி20 கிரிக்கெட்டில் இது மிகவும் மட்டமான ஆட்டம்தான். துவக்கத்தில் அதிக விக்கெட்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணம். இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும். இன்று பஞ்சாப் அணி பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடைசி ஓவர்வரை போட்டியை எடுத்து வந்தனர்'' எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்