ஆப்நகரம்

CSK vs RCB: 'மாஸ் திட்டம்'...ஆர்சிபி பௌலர்களை பயமுறுத்த அப்டி செஞ்சேன்: தோனி ஓபன் டாக்!

ஆர்சிபியை வீழ்த்த சிஎஸ்கே போட்ட திட்டம் இதுதான்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 18 Apr 2023, 7:22 am
ஐபிஎல் 16ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


சின்னச்சாமி ஸ்டேடியத்தில் துவங்கி நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவில், ஓபனர் டிவோன் கான்வே 45 பந்துகளில் தலா 6 பவுண்டரி, சிக்ஸர் உட்பட 83 ரன்களை குவித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து ரஹானே 37 (20) ரன்களை சேர்த்த நிலையில், மிடில் ஓவர்களின்போது ஷிவம் துபே களமிறக்கப்பட்டார். இவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுபவர் என்பதால்தான், முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.

அதற்கேற்றாற்போல், துபே 27 பந்துகளில் 52 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் மொயின் அலி 19 (9) அதிரடி காட்டியதால், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 226/6 ரன்களை குவித்து அசத்தியது.

ஆர்சிபி இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் டூ பிளஸி 62 (33), மேக்ஸ்வெல் 76 (36) இருவரும் காட்டடி அடித்து அசத்தினார்கள். இவர்கள் ஆட்டமிழந்தப் பிறகு ஆட்டம் சிஎஸ்கே பக்கம் மாறியது. இதனைத் தொடர்ந்து ஷாபஸ் அகமது 12 (10), தினேஷ் கார்த்திக் 28 (14), பிரபுதேசாய் 19 (11) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 218/8 ரன்களை மட்டும் சேர்த்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோனி பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய தோனி, ''பெங்களூர் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். அதேபோல்தான் இருந்தது. துபே மிகச்சிறந்த வீரர். பந்தை சரியாக பார்த்து, துல்லியமாக பவுண்டரிக்கு விரட்ட கூடியவர். ஆனால், அவர் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டதால், துபேவை வைத்து பெரிய திட்டம் எதுவும் போட முடியவில்லை. தற்போது பிட்டாக இருக்கிறார். இவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால்தான் மிடில் ஓவர்களில் களமிறக்கப்பட்டார்''

''எதிர்பார்த்தபடியே மிடில் ஓவர்களில் இவர் ரன்களை குவித்தார். பௌலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். 227 ரன்கள் இலக்கை துரத்த வேண்டும் என்றால், அதற்கு எதிரணி பேட்டர்கள் தொடர்ந்து அதிரடி காட்ட வேண்டும். டூ பிளஸி, மேக்ஸ்வெல் ஆகியோர் மட்டும் கடைசிவரை விளையாடியிருந்தால், 18 ஓவர்களிலேயே அவர்கள் வென்றிருப்பார்கள். பிராவோ சிறந்த பயிற்சியாளர். அவரது தலைமையில் பௌலர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார்கள்'' எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்