ஐபிஎல் 16ஆவது சீசன் 27ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. மொஹாலியில் துவங்கி நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டூ பிளஸிக்கு காயம் ஏற்பட்டதால், இம்பாக்ட் பிளேயராக மட்டும் இடம்பெற்றார். கோலிதான் அணியை வழிநடத்தினார்.
ஆர்சிபி இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர்கள் விராட் கோலி, பாப் டூ பிளஸி இருவரும் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி அசத்தினார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தும் நீடித்து வந்தது.
இந்நிலையில் கோலி 59 (47), டூ பிளஸி 84 (56) இருவரும் பெரிய ஸ்கோர் அடித்து ஆட்டமிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 0 (1), தினேஷ் கார்த்திக் 7 (5), லாம்ரோர் மஹிபால் 7 (9), ஷாபஸ் அகமது 5 (3) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 174/4 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஓபனர் பிரப்சிம்ரன் சிங் 46 (30) மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டார். அதர்வா டைட் 4 (2), மேத்யூ ஷார்ட் 8 (7), லிவிங்ஸ்டன் 2 (4), கேப்டன் சாம் கரன் 10 (12), ஷாருக்கான் 7 (5) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்கள்.
இறுதியில் ஜிதேஷ் ஷர்மா 41 (27) மட்டும் போராடி ரன்களை சேர்த்தார். இருப்பினும், இவருக்கு துணையாக யாரும் செயல்படாததால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 150/10 ரன்களை மட்டும் சேர்த்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
கோலி சதம்:
இப்போட்டியில் கோலி 59 ரன்களை அடித்ததன் மூலம், ஐபிஎலில் 100 முறை 30+ ஸ்கோர்களை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
டூ பிளஸிக்கு காயம் ஏற்பட்டதால், இம்பாக்ட் பிளேயராக மட்டும் இடம்பெற்றார். கோலிதான் அணியை வழிநடத்தினார்.
ஆர்சிபி இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர்கள் விராட் கோலி, பாப் டூ பிளஸி இருவரும் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி அசத்தினார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தும் நீடித்து வந்தது.
இந்நிலையில் கோலி 59 (47), டூ பிளஸி 84 (56) இருவரும் பெரிய ஸ்கோர் அடித்து ஆட்டமிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 0 (1), தினேஷ் கார்த்திக் 7 (5), லாம்ரோர் மஹிபால் 7 (9), ஷாபஸ் அகமது 5 (3) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 174/4 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஓபனர் பிரப்சிம்ரன் சிங் 46 (30) மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டார். அதர்வா டைட் 4 (2), மேத்யூ ஷார்ட் 8 (7), லிவிங்ஸ்டன் 2 (4), கேப்டன் சாம் கரன் 10 (12), ஷாருக்கான் 7 (5) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்கள்.
இறுதியில் ஜிதேஷ் ஷர்மா 41 (27) மட்டும் போராடி ரன்களை சேர்த்தார். இருப்பினும், இவருக்கு துணையாக யாரும் செயல்படாததால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 150/10 ரன்களை மட்டும் சேர்த்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
கோலி சதம்:
இப்போட்டியில் கோலி 59 ரன்களை அடித்ததன் மூலம், ஐபிஎலில் 100 முறை 30+ ஸ்கோர்களை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.