ஆப்நகரம்

CSK vs RR: 'அந்த முக்கியமான திட்டத்தில் சொதப்பல்'...பௌலர்கள் மீது களத்திலேயே தோனி அதிருப்தி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பௌலர்கள் சொதப்பலாக செயல்பட்டு வருகிறார்கள்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Apr 2023, 8:25 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் 37ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Samayam Tamil தோனி


பிட்ச் ரிப்போர்ட்:

போட்டி நடைபெறும் ஜெய்பூர் பிட்சில் 160+ ரன்களை அடித்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. அந்த அளவுக்கு பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

இது சிஎஸ்கேவுக்கு சாதகமாக செய்தியாகத்தான் பார்க்கப்பட்டது. காரணம், சிஎஸ்கே ஸ்பின்னர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், ராஜஸ்தான் பேட்டர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சொதப்பி வந்தார்கள். இதனால், சிஎஸ்கே ஸ்பின்னர்கள் மற்றும் ராஜஸ்தான் பேட்டர்களுக்கு எதிராக போர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஜெய்ஷ்வால் காட்டடி:


கேப்டன் தோனி, முதல் மூன்று ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்தார். ஆகாஷ் சிங்கின் முதல் ஓவரில் 14 ரன்களும், துஷர் தேஷ்பண்டே ஓவரில் 10 ரன்களும், தொடர்ந்து ஆகாஷ் சிங் ஓவரில் 18 ரன்களும் கசிந்தது. இதனால், சிஎஸ்கே முதல் 3 ஓவர்களிலேயே 42 ரன்களை குவித்தது.

தீக்‌ஷனா அபாரம்:

இதனைத் தொடர்ந்து மகீஷ் தீக்‌ஷனாவை தோனி கொண்டு வந்தார். எதிர்பார்த்தபடியே அவர் 2 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். இதனால், ஸ்பின்னர்களுக்கு எதிராக ராஜஸ்தான் இனி சொதப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து தீக்‌ஷனா, ஜடேஜா இருவரும் அவ்வபோது 5,6ஆவது ஸ்டெம்ப் லைனில் ஷார்ட் பால்களை வீசி சொதப்பினார்கள். இதனை பயன்படுத்தி ஜெய்ஷ்வால் காட்டடி அடிக்க ஆரம்பித்தார். இதனால், தோனி களத்திலேயே அதிருப்தியுடன்தான் காணப்பட்டார்.

இந்நிலையில், ஜாஸ் பட்லர் 27 (21) விக்கெட்டை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார். மறுமுனையில் ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்களை குவித்து களத்தில் இருக்கிறார். சாம்சன் 7 (10) ரன்களை எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 104/1 ரன்களை சேர்த்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்