ஆப்நகரம்

CSK vs RR: 'இத செஞ்சிருந்தா ஜெயிச்சிருப்போம்'...அந்த சில ஓவர்கள்தான் தோல்விக்கு காரணம்: தோனி பளிச்!

இதை செய்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என தோனி தெரிவித்துள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 Apr 2023, 7:19 am
ஐபிஎல் 16ஆவது சீசன் 37ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


ராஜஸ்தான் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஓபனர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 77 (43), ஜாஸ் பட்லர் 27 (21) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்தனர். இறுதிக் கட்டத்தில் துரூவ் ஜுரேல் 34 (15), தேவ்தத் படிக்கல் 27 (13) ஆகியோர் அதிரடி காட்டியதால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 202/5 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கேவில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் 47 (29), ஷிவம் துபே 52 (33), மொயின் அலி 23 (12), ரவீந்திர ஜடேஜா 23 (15) ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இருப்பினும், யாருமே பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இம்பாக்ட் வீரர் அம்பத்தி ராயுடுவும் 0 (2) டக் அவுட் ஆகி சொதப்பினார். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 170/6 ரன்களை மட்டும் சேர்த்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன்காரணமாக சிஎஸ்கே முதல் இடத்தில் இருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

தோனி பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு தோனி பேட்டிகொடுத்தார். அதில், ''முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால்தான், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அதற்காக பௌலர்களை குறைகூற முடியாது. அந்த சமயத்தில் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில் எட்ஜ் ஆகி சில பவுண்டரிகள் சென்றது. அந்த ரன்களையும் தடுக்க முடியவில்லை. பதிரனா சிறப்பாகத்தான் பந்துவீசினார். ஸ்கோரை வைத்து, அவரது பந்துவீச்சை எடைபோட முடியாது. மிகச்சிறப்பாக செயல்பட்டார்'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''யாஷஸ்வி ஜெய்ஷ்வால் சரியான டைமிங்கில் பந்துகளை எதிர்கொண்டார். இறுதியில் துரூவ் ஜுரேலும் அதிரடி காட்டி, ஸ்கோரை உயர்த்தினார். ஜெய்பூர் பிட்சில் 183 ரன்களை அடித்ததால்தான், எனக்கு இந்திய அணியில் ஒரு வருடமாக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. இந்த பிட்சை என்னால் மறக்க முடியாது'' எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்