ஆப்நகரம்

PBKS vs LSG: '257 ரன்களை குவிக்க'...போட்ட திட்டம் இதுதான்: வேற லெவல் பண்ணியாச்சு: கே.எல்.ராகுல் ஹேப்பி!

257 ரன்களை அடிக்க போட்ட திட்டம் இதுதான் என கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 29 Apr 2023, 7:03 am
ஐபிஎல் 16ஆவது சீசன் 38ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil கே.எல்.ராகுல்


லக்னோ இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் ஓபனர் கே.எல்.ராகுல் 12 (9) மட்டும்தான் சிறப்பாக செயல்படவில்லை. இவரைத் தொடர்ந்து கைல் மேய்ர்ஸ் 54 (24), ஆயுஸ் படோனி 43 (24), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 72 (40), நிகோலஸ் பூரன் 45 (19), தீபக் ஹூடா 11 (6) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 257/5 ரன்களை குவித்து, பிரமிக்க வைத்தது.

பஞ்சாப் கிங்ஸ்:


மொஹாலி பிட்ச் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்ததால், பஞ்சாப் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றாற்போல் அதர்வா டைட் 66 (36), சிக்கந்தர் ராசா 36 (22), லிவிங்ஸ்டன் 23 (14), சாம் கரன் 21 (11), ஜிதேஷ் ஷர்மா 24 (10) ஆகியோர் அதிரடியாக செயல்பட்டனர். ஆனால், ஒருமுறை கூட பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கப்படவில்லை. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 201/10 ரன்களை மட்டும் சேர்த்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

கே.எல்.ராகுல் பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு கே.எல்.ராகுல் பேட்டிகொடுத்தார். அதில், ''சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இப்போதிருந்து, அனைத்து போட்டிகளிலும் மிகமுக்கியமானதாக இருக்கும். கடந்த போட்டிக்கு பிறகு எங்களுக்கு ஓய்வுக்காக அதிக நாட்கள் கிடைத்தது. அதனால், புத்துணர்ச்சியுடன் களமிறங்கினோம். பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆகையால், முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். 250 ரன்களை அடித்ததன் மூதல், நாங்கள் சரியான திட்டத்தோடுதான் களமிறங்கியிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளலாம்'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''கைல் மேய்ர்ஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். ஆயுஸ் படோனியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஹூடாவும் கடைசி நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம் எனக் கருதுகிறேன்'' என்றார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்