ஆப்நகரம்

CSK vs DC: 'தொடர்ந்து பிளே ஆப் போகனுமா?'...அப்போ இதை செய்ங்க போதும்: ரகசியத்தை போட்டு உடைத்த தோனி!

இதை செய்தால் வெற்றி நிச்சயம் என தோனி பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 20 May 2023, 9:05 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் 67ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், பிளே ஆப் உறுதியாகிவிடும். இதனால், இன்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு மிகமுக்கியமானதாக இருக்கிறது. ஒருவேளை தோற்றால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் கூட போகலாம். இதனால், சிஎஸ்கே பேட்டர்கள் துவக்கம் முதலே ரன்மழை பொழிந்தனர்.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓபனர்கள் டுவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார்கள். இதனால், சிஎஸ்கே 13 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 127/0 ரன்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து 14.3 ஓவரின்போது, சேத்தன் சகார்யா பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் 79 (50) விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், சிஎஸ்கேவின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த ஓவரிலேயே லலித் யாதவ் பந்துவீச்சில் கான்வே, துபே இருவரும் சேர்ந்து 19 ரன்களை குவித்தார்கள். அப்போது, கலீல் அகமது பந்துவீச்சில் ஷிவம் துபே 22 (9) ஆட்டமிழந்தார். தொடர்ந்து கான்வேவும் 87 (52) நடையைக் கட்டினர்.

இறுமியில் தோனி 5 (4), ரவீந்திர ஜடேஜா 20 (7) இருவரும் களத்தில் இருந்தார்கள். சிஎஸ்கே, 20 ஓவர்கள் முடிவில் 223/3 ரன்களை குவித்தது.

டெல்லி இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 86 (58) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். பிரித்வி ஷா 5 (7), சால்ட் 3 (6), ரிலே ரூசோவ் 0 (1), அக்சர் படேல் 15 (8) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 146/9 ரன்களை மட்டும் சேர்த்து, 77 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோனி பேட்டி:


இப்போட்டி முடிந்தப் பிறகு தோனி பேட்டிகொடுத்தார். அதில், ''வெற்றிக்கு எந்த ரெசிப்பியும் கிடையாது. சிறந்த வீரர்களை ஏலம் எடுத்து, அவர்களுக்கு சிறந்த இடத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் எதில் வீக்னஸுடன் இருக்கிறார்களோ, அந்த இடத்தை சரிசெய்ய உதவ வேண்டும். அணி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சிறந்த சுற்றுசூழலை அமைத்து தருகிறார்கள். துஷர் தேஷ்பண்டே முன்பைவிட அதிகம் மேம்பட்டுள்ளார். டெத் ஓவரில் சிறந்த பௌலர் தேவை. மகீஷ் தீக்‌ஷனா இயற்கையாகவே டெத் பௌலராகத்தான் இருக்கிறார்'' எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்