ஆப்நகரம்

KKR vs RCB: 'வரலாறு படைத்தார் ஷர்தூல் தாகூர்'...பேட்டிங்கில் புது சாதனை: கொல்கத்தா கடைசி நேரத்தில் ரன்குவிப்பு!

ஷர்தூல் தாகூர் மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்து அசத்தினார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 6 Apr 2023, 9:22 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
Samayam Tamil ஷர்தூல் தாகூர்


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், ஆர்சிபி பௌலர்கள் அபாரமாக செயல்படுவார்கள் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்:

முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த சொதப்பல் ஆர்சிபிக்கு எதிராகவும் தொடர்ந்தது.

ஓபனர் வெங்கடேஷ் ஐயர் 3 (7), மந்தீப் சிங் 0 (1), கேப்டன் நிதிஷ் ராணா 1 (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். இருப்பினும், மறுபக்கம் ஓபனர் குர்பஸ் நம்பிக்கையளிக்க கூடிய வகையில் சிறப்பாக விளையாடி 57 (44) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே கரண் ஷர்மா சுழலில் ஆண்ட்ரே ரஸல் 0 (1) கோல்டன் டக் ஆனார்.

காட்டடி:

இதனைத் தொடர்ந்து ரிங்கு சிங், ஷர்தூல் தாகூர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் ரிங்கு சிங் நிதானமாக விளையாட, மறுபக்கம் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இதனால், 12 ஓவர்களில் 94/5 எனத் திணறிக் கொண்டிருந்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 145/5 ரன்களை குவித்து அசத்தியது.

கடைசி நேரத்திலும் அசத்தல்:

தொடர்ந்து டெத் ஓவர்களில் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். ஷர்ஷல் படேல் வீசிய 17ஆவது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஷர்தீல், தொடர்ந்து சிராஜ் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். அப்போது, ரிங்கு சிங்கும் ஒரு சிக்ஸர் அடித்ததால், 17, 18 ஆகிய ஓவர்களில் 13, 15 என ரன்கள் கசிந்தது.

தொடர்ந்து ஹர்ஷல் படேலின் 19ஆவது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரிங்கு 33 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். அடுத்து, சிராஜ் வீசிய கடைசி ஓவரில் ஷர்தூல் தாகூர் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு நடையைக் கட்டினார். ஷர்தூல் 29 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களை அடித்திருந்தார். இப்படி இரண்டு பேரும் அதிரடி காட்டியதால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 204/7 ரன்களை குவித்து அசத்தியது.

ஷர்தூல் சாதனை:

16ஆவது சீசனில்20 பந்துகளில், அதாவது அதிவிரைவாக அரை சதம் அடித்த வீரராக ஷர்தூல் தாகூர் மட்டும்தான் இருக்கிறார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இதுதான் ஷர்தூல் தாகூரின் சிறந்த ஸ்கோர் ஆகும்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்