ஆப்நகரம்

IPL 2023 : 'சிஎஸ்கேவின்'...X-Factor யார்? துருப்பு சீட்டாக செயல்படப் போவது இவர்தான்: ஹைடன் பளிச்!

சிஎஸ்கேவின் எக்ஸ் பேக்டர் வீரர் யார் என்பது குறித்து மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Mar 2023, 11:18 am
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ், அஜிங்கிய ரஹானே ஆகியோரை ஏலம் எடுத்தது.
Samayam Tamil மேத்யூ ஹைடன்


இதனைத் தொடர்ந்து, காயம் காரணமாக கைல் ஜேமிசன் விலகியதால், அவருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிசாண்டா மகாலாவை வாங்கியது. இருப்பினும், இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

காரணம்:

பென் ஸ்டோக்ஸ் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்தான். ஆனால், ஐபிஎலில் இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 25.56 சராசரியுடன் ரன்களையும், 28 விக்கெட்களையும் மட்டும்தான் வீழ்த்தியிருக்கிறார்கள். இதனால்தான், இவரை எந்த அணியும் வாங்காமல் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே இவரை 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

மறுபக்கம், மாற்று வீரராக வாங்கப்பட்ட 32 வயதாகும் சிசாண்டா மகாலா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் 4 ஓவர்களில் 67 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருக்கிறார். இப்படி சிஎஸ்கேவின் தேர்வு சொதப்பலாக இருப்பதாக, பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஹைடன் பேட்டி:

இந்நிலையில், சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், 16ஆவது சீசனில் சிஎஸ்கேவின் X-Factor யார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், ''பென் ஸ்டோக்ஸ் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. ஆனால், இவரால் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வருடம் சிஎஸ்கேவின் எக்ஸ் பேக்டராக பென் ஸ்டோக்ஸ்தான் இருப்பார்'' எனக் கூறினார்.

கடந்த சீசனில் கேப்டன்ஸி அழுத்தம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படவில்லை. இவர் குறித்து பேசிய ஹைடன், ''ஜடேஜா எப்போதுமே, அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த கூடியவர். அவர் சிறந்த ஆல்-ரவுண்டர். தற்போது, சிறந்த பார்மில் இருக்கிறார். ஆகையால், தொடர்ச்சியாக இவரால் சிறப்பாக செயல்பட முடியும்'' எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி மார்ச் 31ஆம் தேதி, அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்