ஆப்நகரம்

IPL 2023 Final: '2 பந்தில் 10 ரன் தேவை'...அப்போது ஹார்திக் வந்து என்ன சொன்னார்? மோஹித் ஷர்மா விளக்கம்!

ஹார்திக் பாண்டியா அருகில் வந்து என்ன சொன்னார் என்பது குறித்து மோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 31 May 2023, 2:58 pm
Samayam Tamil ஹார்திக் பாண்டியா, மோஹித் ஷர்மா
ஐபிஎல் 16ஆவது சீசன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

குஜராத் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் விருத்திமான் சாஹா 54 (39), ஷுப்மன் கில் 39 (20), சாய் சுதர்ஷன் 96 (47), ஹார்திக் பாண்டியா 21 (12) என களமிறங்கிய அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 214/4 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

மழை குறுக்கீடு காரணமாக சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் 26 (16), டிவோன் கான்வே 47 (25) இருவரும் அதிரடியாக விளையாடி நூர் அகமது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ரஹானேவும் 27 (13) சிறப்பாக செயல்படவில்லை.

கடைசி கட்டம்:

இறுதியில், அம்பத்தி ராயுடு காட்டடி அடித்து, 19 (8) ரன்களை எடுத்தார். தொடர்ந்து, அடுத்த பந்திலேயே தோனியை மோஹித் வெளியேற்றினார். இறுதியில் 12 பந்துளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷமி 8 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார்.

இறுதியில் 6 பந்துளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளையும் யார்க்கர்களாக வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில், ஸ்லாட் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஜடேஜா பவுண்டரி அடித்தார். இதனால், சிஎஸ்கே 15 ஓவர்களில் 171/5 ரன்களை சேர்த்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

மோஹித் ஷர்மா போட்டி:

இந்நிலையில், கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, அருகில் வந்த ஹார்திக் பாண்டியா என்ன சொன்னால் என்பது குறித்து மோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில், ''கடைசி ஓவரில் தொடர்ந்து யார்க்கர்களை வீச வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்ய விரும்பினேன்'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, அப்போதும் யார்க்கர்தான் வீச முடிவு செய்திருந்தேன். அந்த சமயத்தில், அருகில் வந்த ஹார்திக் பாண்டியா கடைசி இரண்டு பந்தில் என்ன செய்யம் போகிறாய் எனக் கேட்டார். அதற்கு நான், 'யார்க்கர்தான் வீசப் போகிறேன்' எனக் கூறினேன். சரி அப்படியே செய் என ஹார்திக் கூறினார். ஆனால், இரண்டு பந்துகளும் விழக் கூடாத இடத்தில் விழுந்தது. நான் இப்போது தூக்கமில்லாமல் தவதித்து வருகிறேன்'' எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்