ஆப்நகரம்

IPL 2023: 'எப்போது துவங்கும்?'...எதில் பார்க்க முடியும்? 2018-க்கு முதல்முறை..களைகட்டபோகும் திருவிழா!

ஐபிஎல் 16ஆவது சீசன் துவக்க விழா குறித்து முழு விபரம்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 30 Mar 2023, 12:03 pm
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி (நாளை) துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஐபிஎல் 2023


ஹோம் கிரோண்டில்:

கொரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அணி ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

துவக்க விழா:

ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டி அகமதாபாத் ஸ்டேடியத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கு முன், பிரமாண்ட துவக்க விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் நேரில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது துவங்கும்?

ஐபிஎல் துவக்க விழா, நாளை மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.

விழாவில் ஆட்டம், கொண்டாட்டம்:

இந்த துவக்க விழாவில், சில சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாட உள்ளனர். சிலர் பாடவும் உள்ளனர். நடிகை தமன்னா பாடியா துவக்க விழாவில் நடனமாட உள்ளார். மேலும், பாடகர் அர்ஜித் சிங் விழாவில் கலந்துகொண்டு, தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார். கத்ரினா கைப், ரஷ்மிகா மந்தனா போன்றவர்களும் இந்த துவக்க விழாவில் நடனமாட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எதில் பார்க்க முடியும்?

2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்த ஐபிஎல் தொடரை இரண்டு வேறு நிறுவனங்கள் ஒளிபரப்ப உள்ளது. தொலைக்காட்சியில் ஸ்டார் நிறுவனமும், ஆல்-லைனில் ஜியோ சினிமா ஆஃப்-பும் இந்த ஐபிஎல் தொடரை நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. தொலைக்காட்சியில் தமிழ் கமெண்ட்ரியை காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4-யை தேர்வு செய்ய வேண்டும். ஜியோ சினிமாவிலும் தமிழ் கமெண்ட்ரி இடம்பெறவுள்ளது.

பங்கேற்கவில்லை:

எந்தாண்டில் இல்லாத வகையில் இம்முறை பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஜஸ்பரீத் பும்ரா போன்ற இந்திய அணி வீரர்களும், ஜெய் ரிச்சர்ட்சன், ஹேசில்வுட் போன்ற வீரர்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் கடும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெய் ரிச்சர்ட்சன் விலகிவிட்டதால், தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிசாண்டா மகாலாவை மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்