ஆப்நகரம்

RCB vs KKR: 'விளையாடிக் கொண்டிருக்கும் போதே'...ஆர்சிபிக்கு வந்த கெட்ட செய்தி: முக்கிய வீரர் விலகி..நாடு திரும்பினார்!

ஆர்சிபி அணி விளையாடிக் கொண்டிருக்கும் போதே முக்கிய வீரர், தொடரில் இருந்து விலகினார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 6 Apr 2023, 9:02 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
Samayam Tamil ஆர்சிபி


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், ஆர்சிபி பௌலர்கள் அபாரமாக செயல்படுவார்கள் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்:

முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த சொதப்பல் ஆர்சிபிக்கு எதிராகவும் தொடர்ந்தது.

ஓபனர் வெங்கடேஷ் ஐயர் 3 (7), மந்தீப் சிங் 0 (1), கேப்டன் நிதிஷ் ராணா 1 (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். இருப்பினும், மறுபக்கம் ஓபனர் குர்பஸ் நம்பிக்கையளிக்க கூடிய வகையில் சிறப்பாக விளையாடி 57 (44) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே கரண் ஷர்மா சுழலில் ஆண்ட்ரே ரஸல் 0 (1) கோல்டன் டக் ஆனார்.

காட்டடி:

இதனைத் தொடர்ந்து ரிங்கு சிங், ஷர்தூல் தாகூர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் ரிங்கு சிங் நிதானமாக விளையாட, மறுபக்கம் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இதனால், கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 145/5 ரன்களை குவித்து அசத்தியது. தற்போது ரிங்கு சிங் 20 (20), ஷர்தூல் தாகூர் 47 (19) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

ரீஸ் டாப்ளி விலகல்:

ஆர்சிபி அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளி, முதல் லீக் போட்டியில் மும்பைக்கு எதிராக பவுண்டரியை தடுக்கும்போது, வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்நுத மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், இத்தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இதனை, போட்டி நடைபெறும்போது 12ஆவது ஓவரின்போது, ஆர்சிபி பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சை பங்கர் வர்ணனையாளர்களுடம் பேசியபோது அறிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்