ஆப்நகரம்

IPL 2023: 'பைனல் வெற்றியை தீர்மானிக்கும் சூதாட்டம்?'...வெற்றியாளர் முன்கூட்டியே மைதானத்தில் அறிவிப்பு!

16ஆவது சீசனில் இந்த அணிதான் வெற்றிபெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 29 May 2023, 2:20 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் மைனாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் இந்த இறுதிப் போட்டியை காண மைதானத்தில் திரண்டனர்.
Samayam Tamil ஐபிஎல் 2023


இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், போட்டி துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாக, மைதானத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால், சுமார் 2 மணி நேரம் ஆட்டம் தடைபட்ட நிலையில், அடுத்து 9 மணியளவில் மழையில் ஆட்டம் நின்றது. அடுத்து, 9:35 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்தது. இதனால், மைதானத்தில் மீண்டும் தார்பாய்கள் போர்த்தப்பட்டது.

இன்று நடைபெறும்:

மழை இப்போது நின்றுவிடும், அப்போது நின்றுவிடும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரவு 10:55 மணியளவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்தி ஒன்று வெளியானது. மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், ஆட்டத்தை திட்டமிட்டபடி 12:06 மணிக்குள் துவங்க முடியாது என மைதான ஊழியளர்கள் தெரிவித்துவிட்டதால், வேறு வழியில்லாமல் பைனலை திங்கட் கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

இந்நிலையில், இன்று பகல் வானிலை சிறப்பாக இருப்பதால், போட்டியை திட்டமிட்டபடி நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இந்நிலையில், அகமதாபாத் மைதானத்தில் இருக்கும் டிஜிட்டல் போர்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனலில் தோல்வியை சந்தித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



ஏற்கனவே, ஐபிஎல் ஒரு சூதாட்டம் என பலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில், முன்கூட்டியே சிஎஸ்கே தோற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், இதுகுறித்து பிசிசிஐ விளக்கமளிக்கும் எனக் கருதப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்