ஆப்நகரம்

CSK vs GT: 'இந்த 3 குஜராத் வீரர்களை'...சமாளிச்சுட்டா..சிஎஸ்கேதான் ஜெயிக்கும்? கெத்து காட்டுமா சிஎஸ்கே?

இந்த மூன்று குஜராத் வீரர்கள்தான் சிஎஸ்கேவுக்கு பெரும் தலைவலியாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 31 Mar 2023, 10:48 am
ஐபிஎல் 16ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கி நடைபெறவுள்ளது.
Samayam Tamil சிஎஸ்கே vs குஜராத் டைடன்ஸ்


இதில் அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. முதல் போட்டியிலே வென்று, வெற்றியுடன் துவங்க இரண்டு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிச்சே ஆகணும்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைடன்ஸ் அணியை இரண்டு முறை எதிர்கொண்டு, 2 போட்டிகளிலும் தோற்றது. இதனால், இந்த மோசமான வரலாறை தகர்த்த இன்று வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது. நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக காரியம் கிடையாது.

குஜராத் அணியில் சில மேட்ச் வின்னிங் பேட்டர்கள், பௌலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிஎஸ்கேவுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

சாய் சுதர்சன்:

தமிழக வீரர் சாய் சுதர்ஷன் வலது கை பேட்டர்களுக்கு எதிராக பந்துகளை சிறப்பாக சுழற்ற கூடியவர். இவருக்கு கடந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைத்தது. 5 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்களை கைப்பற்றினார். வலது கை பேட்டர்கள் இவரது பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். ஆகையால், இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஹார்திக் பாண்டியா:

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, சமீப காலமாகவே பவர் பிளேவில் அபாரமாக பந்துவீசி வருகிறார். இது சிஎஸ்கேவுக்கு பெரும் பிரச்சனைதான். காரணம், சிஎஸ்கே ஓபனர்கள் இரண்டு பேரும் பவர் பிளேவில் நிதானமாக துவங்கி போகபோகதான் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். இதனால், ஹார்திக் பாண்டியா பவர் பிளேவில் அபாரமாக பந்துவீசினால், சிஎஸ்கேவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும்.

ரஷித் கான்:

ரஷித் கான், சமீபத்தில் தொடர்ந்து 106 பந்துகளில் ஒரு பவுண்டரியை கூட விட்டுக்கொடுக்காமல் சாதனை படைத்திருந்தார். இதன்மூலம், அவர் முரட்டு பார்மில் இருப்பது தெரிய வருகிறது. ஆகையால், ரஷித் கான் வீசும் நான்கு ஓவர்கள்தான் இன்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓவர்களில் சிஎஸ்கே அதிக ரன்களை அடிக்கவில்லை என்றால், பெரிய பின்னடைவு ஏற்படும்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்