ஆப்நகரம்

'செம்ம ட்விஸ்ட்'.. அந்த அணிக்கு சென்று.. கேப்டனாக போகும் ரோஹித் சர்மா: பேச்சு வார்த்தை தீவிரம்.. நடப்பது இதுதான்!

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா, மாற்று அணிக்கு சென்று, அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 11 Apr 2024, 8:17 am
ஐபிஎல் 2024 தொடர் முடிந்த உடனே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக உள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil ipl 2025 rohit sharma chance to play for punjab kings as a captain
'செம்ம ட்விஸ்ட்'.. அந்த அணிக்கு சென்று.. கேப்டனாக போகும் ரோஹித் சர்மா: பேச்சு வார்த்தை தீவிரம்.. நடப்பது இதுதான்!


மும்பை அணியில்:

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அதன்பிறகு, சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அணியில், சில விஷயங்கள் சரியாக செல்லவில்லை.

வாழ்த்து சொல்லவில்லை:

ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்கள் வாழ்த்துகளை சொல்லவில்லை. இதன்மூலம், இவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது.

தொடரும் சர்ச்சை:

இந்நிலையில், போட்டி நடைபெறும்போது, ரோஹித் சர்மா ஆலோசனை கூற வரும்போது, ஹர்திக் கண்டுகொள்ளாமல் செல்வது போன்ற விஷயங்கள் நடந்து வருகிறது. இருப்பினும், இந்த சர்ச்சை குறித்து ரோஹித்தோ, ஹர்திக்கோ இதுவரை சரியான விளக்கம் கொடுக்கவில்லை.

அதிருப்தியில் ரசிகர்கள்:

ரோஹித்தை இப்படி அவமதிப்பதால், ஹர்திக் பீல்டிங் செய்யும்போது, ரோஹித் சர்மா ரசிகர்கள் ஹர்திக்கை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். களத்தில் நாய் சென்றபோது, ஹர்திக் ஹர்திக் என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருந்தார்கள்.

வேறு அணிக்கு:

ஐபிஎல் 17ஆவது சீசன் முடிந்தப் பிறகு ரோஹித் சர்மா வேறு அணிக்கு செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை நிர்வாகம் சமரசம் செய்தும், ரோஹித் அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் லெங்கர் பேட்டி:

இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லெங்கர், ''ரோஹித் சர்மா எங்கள் அணிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். இதுகுறித்து, மும்பை அணியுடன் பேசுவோம்'' எனக் கூறினார்.

ரோஹித் திட்டவட்டம்:

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ஆர்சிபி போன்ற அணிகள் ரோஹித் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டினாலும், 'என்னை கேப்டனாக நியமிக்கும் அணியில் மட்டுமே நான் இடம்பெறுவேன், ஒரு வருடமாவது என்னை கேப்டனாக நியமிக்க வேண்டும்' என தன்னை அனுகும் அணிகளுக்கு ரோஹித் சர்மா, கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அவர் விரும்பும் வரை கேப்டன் பதவியை கொடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரோஹித் கேட்கும் தொகையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரோஹித் பஞ்சாப் அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்