ஆப்நகரம்

DC vs KKR: 2 பந்துகளுக்கு 6 ரன் தேவை…திரிபாதி அடித்த சிக்ஸர்: கண் கலங்கிய ரிஷப்..வைரல் வீடியோ இதோ!

ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

Samayam Tamil 14 Oct 2021, 7:33 am
ஐபிஎல் 14ஆவது சீசன் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 135/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிகர் தவன் 36 (39), ஷ்ரேயஸ் ஐயர் 30 (27) ஆகியோர் ரன்களை சேர்த்தார்கள்.
Samayam Tamil ராகுல் திரிபாதி


இலக்கைத் துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓபனர்கள் ஷுப்மன் கில் 46 (46), வெங்கடேஷ் ஐயர் 55 (41) இருவரும் சிறப்பான துவக்கம் தந்ததால் கொல்கத்தா அணி 12 ஓவர்களில் 96/0 என இருந்தது. இதன்பிறகு நிதிஷ் ராணா 13 (12) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இறுதியில் தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன் ஆகியோர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக 17ஆவது ஓவரில் ஆவேஷ் கான் 2 ரன்களையும், 18ஆவது ஓவரில் ரபாடா 1 ஒரன்னையும், 19ஆவது ஓவரில் நோர்க்கியா 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார்கள்.



2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை:

இதனால் கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வினின் முதல் 4 பந்துகளில் ஒரு ரன் மற்றும் ஷகிப் 0 (2), நரைன் 0 (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால், கடைசி 2 பந்துக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திரிபாதி சிக்ஸர் அடித்து அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம், கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை சிஎஸ்கே, கொல்கத்தா இடையில் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்