ஐபிஎல் 14ஆவது சீசன் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுமோசமாக சொதப்பி முதல் 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இதனால், இந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை பெறுவது கடினம் என்றுதான் பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில், அமீரகத்தில் துவங்கிய ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து கொல்கத்தா தரமான கம்பேக் கொடுத்து, எதிரணிகளை மிரட்டி வருகிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் வெங்கடேஷ் ஐயர்தான். கொல்கத்தா அணி ஓபனர்கள் முதல் பாதி ஆட்டங்களின்போது படுமோசமாக சொதப்பினார்கள். இதுதான் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால், இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது புது ஓபனரை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருந்தது. சுனில் நரைனைதான் ஓபனராக களமிறக்க முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில், இறுதியில் புதுமுக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தனர். அந்த முடிவு சரியானதுதான் என நிரூபிக்கும் வகையில் வெங்கடேஷ் ஐயர் மிரட்டலாக விளையாடி விளையாடி வருகிறார்.
DC vs KKR: எதுவும் சொல்ல விரும்பல…உழைப்பு எல்லாம் வீணா போச்சு: ரிஷப் பந்த் வருத்தம்!
ரன் மழை:
இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர், 320 ரன்கள் குவித்து, ஐபிஎலில் முதல் 9 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நிதிஷ் ராணா (359), ராகுல் திரிபாதி (352), கௌதம் கம்பீர் (346), ரோஹித் ஷர்மா (331) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் இருக்கிறார்கள். வெங்கடேஷ் இந்த 9 போட்டிகளில் குவித்து 41* (27), 53 (30), 18 (15), 15 (15), 67 (49), 8 (14), 38 (35), 26 (30), 55 (41) ரன்கள் ஆகும்.
கண்டுபிடிப்பு:
இப்படி தொடர்ந்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெங்கடேஷ் ஐயரின் திறமையை அறிந்து அவருக்கு எப்படி கொல்கத்தா அணியினர் ஓபனராக களமிறக்கினர் என்ற விஷயம் இதுவரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்து வந்தது.
DC vs KKR: 2 பந்துகளுக்கு 6 ரன் தேவை…திரிபாதி அடித்த சிக்ஸர்: கண் கலங்கிய ரிஷப்..வைரல் வீடியோ இதோ!
இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய கொல்கத்தா அணிக் கேப்டன் இயான் மோர்கன் இதுகுறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். “வெங்கடேஷ் ஐயரின் திறமையை கண்டுபிடித்து அவருக்கு தரமான பயிற்சி அளித்து வந்தது அணி பயிற்சியாளர் பிரென்டன் மெக்கல்லம்தான். அவர்தான், வெங்கடேஷ் ஐயரை ஓபனராக களமிறக்க தயார்ப்படுத்தி வந்தார். வெங்கடேஷ் ஐயரால் எப்பேர்ப்பட்ட மைதானங்களிலும் சிறப்பாக விளையாட முடியும்” எனக் கூறினார்.
இதற்கு முக்கிய காரணம் வெங்கடேஷ் ஐயர்தான். கொல்கத்தா அணி ஓபனர்கள் முதல் பாதி ஆட்டங்களின்போது படுமோசமாக சொதப்பினார்கள். இதுதான் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால், இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது புது ஓபனரை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருந்தது. சுனில் நரைனைதான் ஓபனராக களமிறக்க முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில், இறுதியில் புதுமுக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தனர். அந்த முடிவு சரியானதுதான் என நிரூபிக்கும் வகையில் வெங்கடேஷ் ஐயர் மிரட்டலாக விளையாடி விளையாடி வருகிறார்.
DC vs KKR: எதுவும் சொல்ல விரும்பல…உழைப்பு எல்லாம் வீணா போச்சு: ரிஷப் பந்த் வருத்தம்!
ரன் மழை:
இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர், 320 ரன்கள் குவித்து, ஐபிஎலில் முதல் 9 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நிதிஷ் ராணா (359), ராகுல் திரிபாதி (352), கௌதம் கம்பீர் (346), ரோஹித் ஷர்மா (331) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் இருக்கிறார்கள். வெங்கடேஷ் இந்த 9 போட்டிகளில் குவித்து 41* (27), 53 (30), 18 (15), 15 (15), 67 (49), 8 (14), 38 (35), 26 (30), 55 (41) ரன்கள் ஆகும்.
கண்டுபிடிப்பு:
இப்படி தொடர்ந்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெங்கடேஷ் ஐயரின் திறமையை அறிந்து அவருக்கு எப்படி கொல்கத்தா அணியினர் ஓபனராக களமிறக்கினர் என்ற விஷயம் இதுவரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்து வந்தது.
DC vs KKR: 2 பந்துகளுக்கு 6 ரன் தேவை…திரிபாதி அடித்த சிக்ஸர்: கண் கலங்கிய ரிஷப்..வைரல் வீடியோ இதோ!
இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய கொல்கத்தா அணிக் கேப்டன் இயான் மோர்கன் இதுகுறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். “வெங்கடேஷ் ஐயரின் திறமையை கண்டுபிடித்து அவருக்கு தரமான பயிற்சி அளித்து வந்தது அணி பயிற்சியாளர் பிரென்டன் மெக்கல்லம்தான். அவர்தான், வெங்கடேஷ் ஐயரை ஓபனராக களமிறக்க தயார்ப்படுத்தி வந்தார். வெங்கடேஷ் ஐயரால் எப்பேர்ப்பட்ட மைதானங்களிலும் சிறப்பாக விளையாட முடியும்” எனக் கூறினார்.