ஆப்நகரம்

சின்ன கிரவுண்டில் சின்னாபின்னம் செய்த கொல்கத்தா - பஞ்சாப் பரிதாபம் - 246 ரன் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்துள்ளது.

Samayam Tamil 12 May 2018, 5:49 pm
இந்தூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்துள்ளது.
Samayam Tamil KKR


டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்தது. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் பவுண்டரி, சிக்ஸர் மழை பொழிந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

சிறப்பான தொடக்கம்:
தொடக்க வீரர்களாக களமிங்கிய லின், நரேன் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். லின் 17 பந்தில் 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தாலும்

நரேன் தன் அதிரடியை தொடர்ந்தார். உத்தப்பாவுடன் சேர்ந்த நரேன் 36 பந்தில் 4 சிக்ஸர், 9 பவுண்டரி விளாசி 75 ரன்கள் குவித்தார். உத்தப்பா 24ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து இணைந்த ரசல், தினேஷ் கார்த்திக் இணை பஞ்சாப் பவுலிங்கை அடித்து நொருக்கியது.
ரசல் 14 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 31 ரன் எடுத்தார்.

சிறிய மைதானம்:

மிக குறுகிய பவுண்டரி எல்லைகள் கொண்ட இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்றதால் இந்த போட்டியில் வீரர்கள் மிக எளிதாக சிக்ஸர், பவுண்டரிகள் விளாசினர்.

246 இலக்கு :

கொல்கத்த 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து சாதித்துள்ளது. பஞ்சாப் 246 ரன்கள் எடுக்க வேண்டிய பரிதாபத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்