ஆப்நகரம்

Mumbai Indians: ரோஹித் சர்மா முடிவுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் வீரர்கள்

ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் ரோஹித் சர்மாவின் விருப்பத்திற்கு முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Mar 2019, 12:11 pm
ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் ரோஹித் சர்மாவின் விருப்பத்திற்கு முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ரோஹித் சர்மா முடிவுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் வீரர்கள்


அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் போட்டியில் தொடக்க்க பேட்ஸ்மேனாக களமிறங்குவேன் என அறிவித்தார்.

இந்திய தேசிய அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வரும் இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது பெரும்பாலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவதில்லை. இதனால் இவரது இந்த அறிவிப்பு ஐபிஎல் உலகில் பரபரப்பை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா, ஐபில் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா களமிறங்குவது நல்ல முடிவு தான். இது மும்பை அண்டியன்ஸின் ரன்களை உயர கிடைக்கும் நல்ல வாய்ப்பு என்று கூறியிருந்தார்.

மேலும், இதுதொடர்பாக பேசிய அனில், மும்பையில் அணியில் ரோஹித் சர்மா தொடக்க பேட்ஸ்மேனாக இறங்குவது பிரச்னை தரும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் ஒருமுறை ரோஹித் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க முடிவு செய்துவிட்டால், அனைத்து ஆட்டங்களிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவேன் என்றும் அவர் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டைரிஸ் பேசும் போது, விரைவில் உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியை பயன்படுத்தி தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்குவதை குறித்து ரோஹித் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு நிச்சயம் சாதகமாக அமையும் என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்