ஆப்நகரம்

PBKS: அடித்து நொறுக்கிய ’கேப்டன்’ அகர்வால்... ஒரு ரன்னில் 100 மிஸ்!

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

Samayam Tamil 2 May 2021, 9:19 pm
ஐபிஎல் தொடரின் 29ஆவது ஆட்டத்தில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பஞ்சாப் அணியில், லோகேஷ் ராகுல் இல்லாததால் கேப்டன் பொறுப்பு மயங்க் அகர்வாலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலுடன் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினார். 16 பந்துகளைச் சந்தித்த இவர் 12 ரன்களை மட்டுமே எடுத்து காகிசோ ரபாடா பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்லையும் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார் ரபாடா.
Samayam Tamil ipl


இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்த டேவிட் மலான் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து வெளியேற, தீபக் ஹூடா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கேப்டன் என்று பொறுப்புடன் மயங்க் அகர்வால் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடினார். அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்கச் செய்தார். பின்வரிசை வீரர்கள் இவருக்கு ஒத்துழைப்பு தராமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இருந்தாலும் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் அணியின் ஸ்கோர் 150 ரன்களைக் கடக்க உதவினார்.

RR vs SRH: ‘புது கேப்டன்’ மரண அடி வாங்கிய ஹைதராபாத்...ராஜஸ்தான் அபார வெற்றி!
கடைசி ஓவரில் 15 ரன்கள் அடித்த அகர்வால் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அகர்வால் 99 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். டெல்லி அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்