ஆப்நகரம்

கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு: வெளியானது மருத்துவமனை அறிக்கை!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மாரடைப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Oct 2020, 7:03 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil file pic


சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மும்பையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது, கபில் தேவுக்கும் மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கபில் தேவ் நண்பரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஆஷோக் மல்ஹோத்ரா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கபில் தேவ் உடன் பேசினேன். அவர் தற்போது நலமாக உள்ளார். நேற்று முதல் அவர் உடல்நல பிரச்சனைகளை உணர்ந்ததாக தெரிவித்தார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” எனத் தெரிவித்தார்.

CSK vs MI Preview: பழி வாங்கக் காத்திருக்கும் மும்பை... தாக்குப்பிடிக்குமா சென்னை? கள நிலவரம்!

மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் கபில் தேவ் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. “கபில் தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தற்போது வரை அவர் ஐசியுவில் தான் உள்ளார். சில தினங்களில் வீடு திரும்புவார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டில் இந்திய அணி முதல் முறை உலகக் கோப்பை வென்றபோது, கபில் தேவ் அணியின் கேப்டனாக இருந்தவர். மொத்தம் 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி, 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் உலகில் பயணித்தவர். கிபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், மருத்துவ நிர்வாக அறிக்கை ஆறுதல் அளிக்கும் வகையில் வெளிவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்