ஆப்நகரம்

ஐபிஎலுக்கு மீண்டும் வாய்ப்பில்லை, அது அவ்வளவுதான்: முன்னாள் வீரர் கருத்து!

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட வாய்ப்பில்லை என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2021, 7:10 am
ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஐபிஎல்


இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன. இது அனைத்தையும் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் நடத்தப்படும் என பிசிசிஐ சார்பில் கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்குள், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை எனப் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டானும் இதே கருத்தைக் கூறியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், “ஐபிஎல் தொடர் உலகின் மிகமுக்கியமான தொடர்தான். தற்போது 14ஆவது சீசனின் முதல் பாதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சிய போட்டிகளை உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு நடத்தப்படும் என அவர்கள் கூறுகிறார்கள். அது எப்படி முடியும் எனத் தெரியவில்லை. இத்தொடரில் இந்திய வீரர்கள் மட்டும் ஆடவில்லை. வெளிநாட்டு வீரர்களும் அவசியம். உலகக் கோப்பை நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை எப்படி வரவழைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “இந்திய அணி அடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து அணியுடன் விளையாட வேண்டும். 5 போட்டிகள் நடைபெற்று முடிய செப்டம்பர் 15ஆம் தேதியாகிவிடும். இதுமுடிந்தவுடன், நியூசிலாந்து அணி இந்தியா வந்து டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும். அடுத்து உலகக் கோப்பை தொடர். இதற்குள் கால அவகாசம் எங்கு உள்ளது? இதனால்தான் கூறுகிறேன், 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்