ஆப்நகரம்

சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்

சென்னை அணியிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் விலகியிருப்பது வேதனை அளிப்பதாக பவுலிங் கோச் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2018, 5:26 pm
சென்னை : சென்னை அணியிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் விலகியிருப்பது வேதனை அளிப்பதாக பவுலிங் கோச் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil csk


ஐபிஎல் போட்டியின் சென்னை அணியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். அவருக்கு முலங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் 11வது சீசனில் சென்னை அணிக்காக விளையாட முடியாது என தெரிவித்துள்ளார்.

பாலாஜி வருத்தம் :
மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான மிச்செல் சாண்ட்னர் காயம் காரணமாக சென்னை அணிக்காக விளையாட முடியாது என கூறியுள்ளது வருத்தமளிக்கின்றது.

தோனிக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீச வேண்டும் என ஆசைப்பட்டவர் சாண்ட்னர். ஆனால் போட்டி தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு முலங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு சாண்ட்னர் போன்ற மிகச்சிறந்த ஆல்ரவுண்டரின் இழப்பு மிகப்பெரியது என சென்னை அணிக்கான பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்