ஆப்நகரம்

‘சிஎஸ்கேவின் வெற்றி பயணம்’ கேம் சேஞ்சர் இவர்தான்: முன்னாள் வீரர் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிநடை போடுவதற்குக் காரணமான வீரர் குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் பேசியுள்ளார்.

Samayam Tamil 10 May 2021, 6:46 am
ஐபிஎல் 13ஆவது சீசனில் படுமோசமாகச் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14ஆவது சீசனின் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளைக் குவித்து, புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி, பார்த்தீவ் படேல்


இந்த மெகா வெற்றிகளுக்கு காரணம் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய மொயின் அலிதான் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் பேசியுள்ளார். 14ஆவது சீசன் மூலம் முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக விளையாட வந்திருக்கும் மொயின் அலி, 7 போட்டிகளிலும் 3ஆவது இடத்தில் களமிறங்கி 157.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 206 ரன்கள் குவித்தார். அதேபோல், 5 முக்கிய விக்கெட்களையும் கைப்பற்றிச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்தார்.

இவர் குறித்துப் பேசிய பார்த்தீவ் படேல், சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் யார் என என்னிடம் கேட்டால், மொயின் அலிதான் எனத் தயங்காமல் சொல்வேன். மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓபனர்கள் ஃபாஃப் டூ பிளஸி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விட்ட இடத்திலிருந்து மொயின் அலி ஆட்டத்தை எடுத்துச் சென்றார். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய இவர், “இந்த ஆண்டு பிளே ஆஃப் முன்னேறும் நான்கு அணிகளை முன் கூட்டியே கணித்து வைத்திருந்தேன். அதில், சிஸ்கேவிற்கும் இடம் கொடுத்தேன். காரணம், தோனி மீது இருந்த நம்பிக்கைதான். அவரால் அணியை வலுவாகக் கட்டமைக்க முடியும் என நினைத்தேன். 14ஆவது சீசனில் சிஎஸ்கே சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்தது. தோனி அணிக்குத் தேவையான மாற்றங்களை நேர்த்தியான முறையில் செய்திருந்தார்” என பார்த்தீவ் படேல் தெரிவித்திருந்தார்.

“சுரேஷ் ரெய்னாதான் எப்போதும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். ஆனால், இந்த சீசனில் மொயின் அலிக்கு மூன்றாவது இடத்தை ஒதுக்கி, அணியின் பேட்டிங் வரிசையைச் சமநிலை அடைய வைத்தார். இதுதான் தோனி, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக் கூடியவர். இதனால்தான் தோனியை பெஸ்ட் கேப்டன் என்கிறோம்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்