ஆப்நகரம்

MS Dhoni: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்க உள்ள தோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று நடைபெறும் போட்டியில் 150 வது முறை கேப்டனாக களமிறங்கி சாதனைப் படைக்க உள்ளார்.

Samayam Tamil 28 Apr 2018, 8:05 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று நடைபெறும் போட்டியில் 150 வது முறை கேப்டனாக களமிறங்கி சாதனைப் படைக்க உள்ளார்.
Samayam Tamil ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்க உள்ள தோனி!!
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்க உள்ள தோனி!!


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 13 அணிகள் விளையாடி உள்ளன. இந்த அணிகள் அனைத்திற்கும் பலர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ஆரம்பத்திலிருந்தே தோனி மட்டுமே கேப்டனாக இருந்து வருகிறார். அவரது தலைமையில், சென்னை அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி, மும்பை அணியோடு மோத உள்ளது. இந்தப் போட்டியில் கேப்டனாக களமிறங்குவதன் மூலம், 150 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர் என்ற பெருமையை தோனி பெற உள்ளார்.

முன்னதாக, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய தோனி, டி20 போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்