ஆப்நகரம்

அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் முரளீதரன்... இன்று டிஸ்சார்ஜ்!

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளீதரன் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.

Samayam Tamil 19 Apr 2021, 2:42 pm
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளீதரன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மாயாஜாலப் பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படும் இவருக்கு தற்போது 49 வயதாகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக முதலில் விளையாடினார். பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்த இவர் தற்போது அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகராகப் பணியாற்றுகிறார். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்துள்ள முரளீதரன் நேற்றைய முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil murali


இருதயப் பிரச்சினை பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்து இன்று வெளியேறுவதாகவும், அவர் பூரண நலமுடன் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் இனி வழக்கமான வேலைகளைத் தொடரலாம் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஆஸி டூர்ல இருந்து ஆளு வேற லெவல் ஆகிடாரு: இளம் பௌலருக்கு கோலி புகழாரம்!
முத்தையா முரளீதரன் ஐபிஎல் தொடருக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் உள்ள மருத்துவமனையிலேயே இதுகுறித்து ஆலோசனை பெற்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை எனவும், சிகிச்சை எதுவும் பெறவேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளனர். பின்னர் இந்தியா வந்த முரளீதரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைக்காகத் தன்னை மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயலதிகாரியான சண்முகநாதன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்